
ஒரு இனமும் - ஈழமும் அழிந்த கதை : ஒரு இனத்துக்காக சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக தன்னையும் தன குடும்பத்தையும் அர்ப்பணித்து,ஒரு இனபோராளியாகவே வாழ்ந்தவர் தான் இந்த பிரபாகரன்! இவரது மரண செய்தி கேட்டு எந்த தமிழன் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லையோ , அவன் கண்டிப்பாக தமிழ் உணர்வுள்ள தமிழனாக இருக்க மாட்டான் ! இன போராட்டம், இன விடுதலை பட்ற்றிஎல்லாம் நம்மக்கு எப்படி புரியும்? நாம்தான் கேவலம் ஒரு ஐநூறு ரூபாய்க்காக நம் ஒட்டுரிமயையே ஐந்து ஆண்டுக்காக ''அடகு'' வைத்து விட்டோமே? நாம் இனி ஐந்து வருடத்திற்கு ''எந்த உரிமைகளை'' பற்றியும் பேசுவதற்கு ''உரிமை'' இல்லை ! பணனாயகத்தில் புரண்டு விட்ட நாம் எங்கே நமது இனத்தை பாதுகாக்க போகிறோம் ??? இனி தமிழ்நாட்டு மக்கள், ''காமராஜரே உயிருடன் வந்து ஒட்டு கேட்டால், அவரிடமே ஐநூறு ரூபாயும், பிரியாணியும் '' கேட்பார்கள் ! இவர்களுக்கு எப்படி புரியும், சொந்த மண்ணில் உரிமைகளை இழந்து வாழ்வது என்றால் என்னவென்று ? ஒரு இனத்தின் உரிமை மறுக்கப்பட்டு நசுக்கப்படும்போது, அவர்களது வேதனை,கஷ்டம்,வலிகளை புரிந்து கொள்ள நாம் புலிகளாக,தமிழனாக,இந்தியனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை....''மனித நேயம் மிக்க மனிதனாக'' இருந்தாலே போதும் ! இதை புரிந்து கொள்ளும் போது அந்த இனம் அழிந்து இருக்கும் ! தமிழ்நாடு ''வந்தாரை வாழவைக்கும்'' ஆனால் ''சொந்த இனத்தை'' சோகத்தில் வைத்து சீரழிக்கும் ! போங்கள் தமிழர்களே போய் ''குடும்பம் கொழிக்க'' அவர்கள் சொந்த டிவி இலே மானாட மயிலாட பாருங்கள்....இலவசங்கள் உங்களை இழுத்து செல்லும் ''வளமான எதிர்காலத்துக்கு'' !
--
--
(¨`·.·´¨)
`·.¸(¨`·.·´¨)
(¨`·.·´¨)¸.·
`·.¸.·´ இப்படிக்கு நெல்லை தமிழன்
--
--
(¨`·.·´¨)
`·.¸(¨`·.·´¨)
(¨`·.·´¨)¸.·
`·.¸.·´ இப்படிக்கு நெல்லை தமிழன்
Publish Post
No comments:
Post a Comment